-
ஶ்ரீரமணத் திருத்தொண்டர்த் தொகை
காப்புச்செய்யுள் (கட்டளைக் கலித்துறை) அண்ட(ம்) எலாமுய்ய ஆய்ந்தான்மத் தானத்தே ஆழ்ந்துநின்று கண்ட வனாரென்று கேட்(டு)ஆன்ம தேசத்தைக் காட்டுவனின் தொண்டர்க் குழாம்நாமத் தேவாரம் யாம்பாடித் தோய்ந்(து)உருகக் கொண்டல் கணேசாயெம் கோள்நீக்கித் தாளின்கீழ் கூட்டுவையே திருத்தொண்டர்த்தொகை (எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) அருணைவாழ் குருரமணர் அடியார்க்கும் அடியேன் அமலத்தில் நிலைபெற்ற அழகம்மைக் கடியேன் தருணனாழ் தவ(ம்)ஓம்பும் சேஷாத்ரிக் கடியேன் தந்தையாய்க் காத்து(உ)ய்ந்த பழனிக்கு(ம்) அடியேன் கருணையால் நானார்நூ(ல்) கைவல்யன் அருள கருவிட்ட சிவப்பிரகா சத்திற்கு(ம்) அடியேன்…
-
Bhagavan’s entry into Arunachala
பகவான்அருணைநுழைதிருப்புகழ் வண்ண விருத்தம் தனதன தனதன தந்தத் தந்தத் தனதானா ……தனதன தனதன தந்தத் தந்தத் தனதானா (பரிமள களப என்ற திருப்புகழ் மெட்டில்) கதவித ழவிழுற வன்றுட் சென்றைக் கியமானோய் ……கருவறை மலையனை வந்தித் துந்தைக் கலமானோய் உதறினை உடமையை உன்பற் றுந்தித் தெளிவோனே ……உனைதொழு மடியவ ரெம்பற் றும்பிட் டருள்வாயே அதிசய மழைநனை யங்கித் தங்கக் கதிரோனே ……அடிமடி வகிர்துணி யங்கத் துண்டைத் தரிபாலா மதிலறு வருணையி லென்றைக் குந்தத் துவமானோய் ……மலைமக ரமணனி…
-
பகவான் ரமண மகரிஷி
பகவான் ரமண மகரிஷியின் ஸ்வானுபூதி தரையெலாம் மணக்க அந்த மணத்தைப் பிடித்து எண்ணற்ற பக்தகோடிகள் அவரது பாதாரவிந்தங்களைத் தேடி வருகிறார்கள். சொல்லுக்கும் மீறிய பகவான் ரமணரைப் போற்றுவதுதாம் எப்படி? அவர் கை கருவியாய் வார்த்தை வண்ணங்களைக் கொண்டு அவரது மணத்தைத் தீட்டிப் பாடும் எளிய முயற்சி இந்த வலைத்தளம். பகவானுக்கு கோடானுகோடி நமஸ்காரங்களுடன் இப்பதிவைத் தொடங்குகிறேன். பகவானுக்கு என்றும் இவையாவும் அர்ப்பணம்.